மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவுநாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி; 500க்கும் மேற்பட்டோர் “ஹெல்மெட்” அணிந்து பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தான் எழுதிய விழிப்புணர்வு பாடலை பாடி அனைவரின் பாராட்டை பெற்றார்:-

செய்திகள்

மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவுநாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி; 500க்கும் மேற்பட்டோர் "ஹெல்மெட்" அணிந்து பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர் ஒருவர் தான் எழுதிய விழிப்புணர்வு பாடலை பாடி அனைவரின் பாராட்டை பெற்றார்:-

மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடந்த 15.1.2024 முதல் இன்று 14.2.2024 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி தலைக்கவசம் ( ஹெல்மெட் ) அணிந்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவேரி நகரில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். சாலை விபத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1433 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 304 பேர் இறந்துள்ளதாகவும், 1559 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு சாலைபாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பாடல் வழியாக வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சாலையில் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் விபத்தினை தவிர்க்கும் வகையில் சிக்னல் விதிகளை மதிக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைககளுடன் போக்குவரத்து காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, குற்றவியல் போலீசார், வாகன விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்த பேரணியில் நிறைவாக போக்குவரத்து காவலர் சதீஸ் என்பவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து மயிலாடுதுறை மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வலியுறுத்தி தான் எழுதிய “நாலுபக்க வாகனம்-நீ எந்த பக்கம் போகனும் சாலையில் உள்ள காவலரின் செய்கைகளை பார்க்கனும், வாகனம் ஓட்டும் முன்னே ஓட்டுநர் உரிமம் வாங்கனும்” என்ற பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.