ஆக்கூர் ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா உற்ச்சவம். பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

செய்திகள்

தரங்கம்பாடி அருகே ஆக்கூர் ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா உற்ச்சவம். திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே  ஆக்கூரில்  மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளா தேவி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா உற்ச்சவம் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. விழாவில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து  மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். இதில் பக்தர் ஓருவர் 16 அடி நீளம் உள்ள அலகை வாயில் குத்தி வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *